முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Future India 2020 updates in Tamil

இந்தியா 2020

 இந்தியாவை வரும் 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக்க வேண்டும் என்று அப்துல் கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் நோக்கத்தோடு இந்தியா 2020 என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள்ளார். அதில் வல்லரசாகவும், முன்னேறிய நாடாகவும் இந்தியா மாற செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டுள்ளார். ஒரு நாடு சிறந்த, வலிமையான நாடாக மாற வேண்டுமென்றால், கீழ்க்கண்ட துறைகளில் தன்னிறைவு காண வேண்டும் என வலியுறுத்துகிறார். 


1. வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல்


2. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம்


3. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம்


4. அடிப்படை கட்டமைப்பு, தடையற்ற மின்சாரம், சீரான சாலை போக்குவரத்து


5. மிகமுக்கிய உயர் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு


 தற்போது ஆண்டுக்கு 1. 8% வளர்ச்சி கண்டு வரும் மக்கள் தொகைப் பெருக்கம் 2020-ல் 1. 5% ஆகக் குறையும். 1991ல் 52% என்று கணக்கிடப்பட்ட கல்வி அறிவு 80% ஆக உயரும். பொருளாதார நிலையிலும், சமூக உறவுகளிலும், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மத்தியில் கூட்டுறவு வளரும். வளர்ச்சியடைந்த இந்தியா என்கிற நிலையினை நமது தேசம் எட்டிவிடும். 1996- ன் விலை நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது 2007 அல்லது 2008-ல் இந்தியா வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 


 இந்த இலக்குகளை எட்ட சில அடிப்படை வளர்ச்சிகள் அவசியம். திறமை வாய்ந்த நம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களை இந்தியா சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல வாழ்வு, சேவை சார்ந்த துறைகள், உற்பத்தி துறை போன்றவற்றில் நமக்கு இருக்கும் மனித வளம் மிக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். உணவு உற்பத்தி, உணவு மேம்பாடு, கணினி மென்பொருள் போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மனித வள மேம்பாட்டைக் கூட்டுவதே மிக முக்கிய தேவையாகும். 


 இந்தியா வரும் 2020ல் வல்லரசு நாடாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு. அது நிறைவேற அவர் கூறும் யோசனைகள் தான் “இந்தியா 2020 வல்லரசு”க்கான பாதை. கலாமின் கனவை நினைவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி. இது கலாமின் இந்தியா 2020 வல்லரசுக்கான வழிகள்:


2020ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும். 


எழுதப் படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100 சதவீதமாக வேண்டும். 


ஒவ்வொரு இந்தியனும் ஒரு பல்கலைக் கழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும். 


“இ - கவர்னன்ஸ்” திட்டத்தை அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும். 


ஒவ்வொரு கிராமத்துக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். 


ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்ய வேண்டும். 


சிறந்த செயல்திட்டங்கள் மூலம் தொழிற்சாலைகளை நிறுவி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 


இந்தியாவில் வசிக்கும் அனைத்து ஏழைகளுக்கும் மிகக்குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைக்க செய்ய வேண்டும். 


இதுவரை அரசு திட்டங்கள் சென்று அடையாத ஏழைகளுக்கு அரசு திட்டத்தின் பலன் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். 


விவசாயிகளுக்கு “நபார்டு” மற்றும் வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்க வேண்டும். 


தொழிற்சாலைகள், பல்கலைக் ஆராய்ச்சியாளர், அறிஞர் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து உணவு உற்பத்தி, தானியம் பதப்படுத்துதல், விவசாய உற்பத்தி ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். 


இன்சூரன்ஸ் கம்பனிகள் சிறுகடன் பயிர் காப்பீடு ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தர வேண்டும். 


கார்ப்பரேட் நிறுவனங்கள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தம் சமுதாய கடமையாக நினைக்க வேண்டும். 


தொலைத் தொடர்பு யுகம் என்று நாம் பெருமை கொள்வது உண்மை எனில் இதுவரை பயன்படுத்தாத மக்களை நாம் அணுக செய்ய வேண்டும். 


இதுதான் கலாம் சொல்லும் “இந்தியா - 2020”. இதனை நாம் பின்பற்ற வழி காண்போம். 








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்!

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்! Tamilsolai Thanjai Periya Kovil ‘Brihadeeswara Kovil’ is not a Tamil name at all, but it is a Sanskrit name. How did the Tamil Kovil get a Sanskrit name? Briha means மிகப்பெரிய — Mihapperiya (huge) and Eswara means God Sivan. It was named so when Maratha Kings ruled Thanjai during 17th-18th Centuries. But, the real name of the Thanjai Periya Kovil is Thanjai Peruvudaiyar Kovil (தஞ்சைப் பெருவுடையார் கோயில்). Not only the name alone Tamil, This is a fully Tamil Kovil. You will be wondered if you hear the true story. The height of the Lingam in the sanctum of the temple is 12 feet which is equal to the number of Tamil vowels. The height of the Linga pedestal is 18 feet which is equal to the number of Tamil consonants. The height of the Temple Gopuram is 216 feet which is equal to the number of Consonantal-vowels. The distance between the Lingam in the sanctum of the temple and the Nandi...

இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

 சென்னை: தி.மு.க., இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்துக் கடக்கும் வலிமை கொண்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது கடிதம்: எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஆய்வுக் கூட்டங்களை நான் மேற்கொண்டு வருகிறேன். சாலையில் இறங்கி நடந்து, அவர்களுடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் இருதரப்பிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடனான சந்திப்புகள் நடைபெறுகின்றன. காழ்ப்புணர்ச்சி இது வெறும் ரோடு 'ஷோ' அல்ல. திராவிட மாடல் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகின்ற அன்புக் கூடல். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம். ஆறாவது முறையாக தி.மு.க., தமிழகத்தை ஆள்கிறது. 7வது முறையும் ஆட்சி அமையும்.மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகள...

விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update

  விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update     விழுப்புரம் மாவட்ட   வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ,  TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்   நவம்பர் 20, 2025 முதல் தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர்   ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்   அறிவித்துள்ளார். Quick Info ·         🏛   அமைப்பு:   விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் ·         📚   பயிற்சி:  TNPSC Group 2 Mains இலவச வகுப்பு ·         📅   தொடக்கம்:  20.11.2025 ·         📝   Registration Last Date:  19.11.2025 ·         🧑 ‍ 🏫   எப்படி பதிவு ?  – நேரில் சென்று பெயர் பதிவு ·     ...